இருண்டகாலம்
https://nilaavanam.blogspot.com/2008/09/blog-post.html
கலியுகன்
......................................................................
......................................................................
வறண்ட இரவுகளாய்
இன்றய பொழுதுகள்
ஆறுமணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும்
தெருவில் நாய்கள் குளறும்
விளக்குகள் அணைந்துபோகும்
வேலிகள் சரசரக்கும்
கடத்தல் வண்டிகள் உறுமும்
வீடுகளோ நடுச்சாமம்போல் காட்டிக்கொள்ளும்
இரவின் ரகசியங்கள்
விடிந்தபின் அம்பலமாகும்
தூர குளறிக்கேட்கும்
தெருவில் பிணங்கள் கருக்கி கிடக்கும்
காணாது போனவரை சனங்கள் தேடும்….
பகலின்பொழுதுகள் ஓடிமறயும்
மீண்டும் இரவுகள் வறண்டுபோகும்
தெருவில் நாய்கள் குளறும்